என் நினைவுகளைச் சிதைத்து
சிரித்தபடிச் செல்கிறாய்
என் கனவுகளைக் கனமாக்கி
காணாததுபோல் செல்கிறாய்
வீழ்ந்துகொண்டிருக்கும் நான்
எழுவது எங்கே, . . . சொர்க்கத்திலா?
தனித்தனி மனங்கள்
தனித்தனிச் சுமைகள்
நட்பு எனும் நீராவது ஊற்றி
மலர வை முடிந்தால்.
* * *
உன் பார்வையால்
என் தனிமையை இழந்தேன்
உன் சிரிப்பால்
என் உணர்வை இழந்தேன்
உன் குணத்தால்
என் இதயத்தை இழந்தேன்
உன் பாசத்தால்
என்னையே இழந்தேன்
உன்னால் எனக்கு
இழப்பு மட்டுமே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment