Monday, June 18, 2007

கா(த)ற் சிலம்பு

கையிலுள்ள சிலம்பு எனதென்று

கர்வித்திருந்தேன்.


உடைக்கும் வேளையைப் படைத்தாய்.


தெறித்தது மறுப்பு;

பறித்தது உயிர்ப்பு.


நரகம்தான் விளைவு என்ற

நிதர்சன வேளையில்

மனம் சொன்னது,

திரிசங்கு சொர்க்கமே

தெவிட்டாத இன்பம் என்று


ஆம்

காலம் கடந்த சூரிய நமஸ்காரம்.

No comments: