Tuesday, November 27, 2007

ஆலகாலம்

காதற் பாற்கடலை
நாளும் கடைந்தேன்
கண்டதெல்லாம் அமுதங்கள்;
அதுவரை நான்
காணாத சொர்க்கங்கள்.

உள்ளிருக்கும்
தேவனும், அசுரனும்
தீராத பசிப்பிணியில்
வேகம் கூட்டினர்;
விளைந்தது ஆலகாலம்.

காக்கும் நீலகண்டன்
கண்ணில் படுவானோ?

No comments: